Friday, June 24, 2016

மனம் ஒரு சிறகானது

இன்று காலையில் மனதின் சிறகுகள் மீது பெரும் பாறாங்கற்கள் வைத்தது போன்ற அழுத்தம், வலி.
நெஞ்சம் கலங்கி நின்ற வேளையில், முதலில் கோவை முனைவர் ஸ்ரீ ஜெகநாத சுவாமியிடம் இருந்து அலைபேசி அழைப்பு.
அபிராமி அந்தாதி தொடரின் நிறைவு பகுதி குறித்து நிறைய பேசினார். அதில் பொதிந்திருந்த ஸ்ரீவித்யா மார்க்கம் குறித்த ஆய்வு விளக்கினார்.
கன்றுகளின் பசியாற, பசுவின் மடியில் இருந்து சுதந்திரமாக விடுபடும் பால் அடுப்பிலிடப்படும்போது அலறி துடிக்கும். அதன்பின் தயிர், வெண்ணை, நெய்யாக பாடாய்படுத்தப்பட்டு இறுதியில் ஹோமத்தில்
நெய் உருவில் கரையும்போது தேவியின் திருவடிகளை சரணடையும் பேரானந்தம் நிகழ்கிறது என்று சுவாமிகள் எழுதிய வரிகளை விவரித்தேன்.
இதுபோல்தான் மனிதனும் கஷ்டங்களின் இறுதியில் இறைவனுக்கு இஷ்டமுடையவனாகிறான் என்பதை இன்றைய பகல் எனக்கு நினைவுபடுத்தியது.
அடுத்த அழைப்பு எழுத்தாளர் திருமிகு ராஜேஷ்குமாரிடம் இருந்து. அப்பா எப்படி இருக்காங்க? உங்கள் பதிவு மனதை உருக்கியது என்றவர் தொடர்ந்து மனம்விட்டு பேசினார்.அலைபேசியில் அப்பாவிடமே அவரை பேச வைத்தேன்.
நேரிலும், எழுத்திலும், பேச்சிலும் பளிச்சிடும் அவரது இளமையின் ரகசியத்தையும் முதன்முறையாக சொன்னார்.
இருபெரும் மனிதநேய மாமனிதர்களின் பேச்சால் இன்றைய பொழுது இனிதானது. மனம் ஒரு சிறகானது.

No comments:

Post a Comment

Comment as என்ற இடத்தில் Anonymous என்பதைத் தெரிவு செய்து கொள்ளலாம் அல்லது gmail அக்கவுண்ட் இருந்தால் google என்ற விவரத்தைத் தெரிவு செய்து கொண்டு, உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.