இதோ புது ஆண்டு பிறக்க போகிறது...
செரிமான கோளாறு - அசிடிடியில் அடிக்கடி அவதியுறும் என்னிடம் ஒரு முறை அலுவலகம் வந்திருந்த டாக்டர் சுதா சேஷையன் சொன்னார்:
நீங்க ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்து கட, கட வென குடிக்காமல், மிகவும் மெதுவாக ஒவ்வொரு மடக்காக குடியுங்கள். ஒவ்வொரு மடக்கு தண்ணீரும் உங்கள் உள் உறுப்புகளை தொட்டு சில்லிட்டு பயணிப்பதை உணரலாம்...
செரிமான கோளாறு - அசிடிடியில் அடிக்கடி அவதியுறும் என்னிடம் ஒரு முறை அலுவலகம் வந்திருந்த டாக்டர் சுதா சேஷையன் சொன்னார்:
நீங்க ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்து கட, கட வென குடிக்காமல், மிகவும் மெதுவாக ஒவ்வொரு மடக்காக குடியுங்கள். ஒவ்வொரு மடக்கு தண்ணீரும் உங்கள் உள் உறுப்புகளை தொட்டு சில்லிட்டு பயணிப்பதை உணரலாம்...
அடுத்த சில மணி நேரத்தில் அதை பின்பற்றினேன். மனம் பரவசமானது. தண்ணீர் கூட அதிக சுவை தெரிந்தது ...
/அம்மா சுட்டு தந்த பணியாரத்தில் பரவி கிடக்கும் தேங்காய் சில்லுகளும், கடலை பருப்பையும் தேடி ருசிக்கும் போது அதன் சுவை அலாதிதான் ...
/ சுவாசத்தின் போது, தூய காற்றை நிதானமாக, உள்ளிழுக்கும் போது உறுப்புகளின் அசைவை உணரும் தருணங்கள் சுகமானவை...
இப்படி செயல்கள் எதுவாயினும் அதன் வழி மனதை செலுத்தினால் அந்த நொடிகளில் வாழ்க்கை ரசனையாகதான் இருக்கிறது..
காலத்தின் வயது் அதிகரித்து, இதோ புது ஆண்டு பிறக்க போகிறது...
பல ஆண்டுகளாய் நினைத்து பட்டியல் போட்டவைகளை 2016-ல் ஆவது பின்பற்ற வேண்டும்...
அதில் முதலாவதாக, அன்றாட அவசிய செயல்களை பட்டியலிட்டு, தேவையற்றவற்றில் கவனம் செலுத்தாமல் இருந்தாலே வாழ்கை சுவையாகும்...
சரவணபவன்ல காபி குடிப்பதை கட் பண்ணனும்...
வாரத்தில் ஒரு நாளாவது மெரீனாவில் காற்று வாங்கணும்...
கோப வார்த்தைகளை குழி தோண்டி புதைக்கணும்...
என இன்னும் பல பட்டியல் 2016க்காக காத்திருகிறது...
/அம்மா சுட்டு தந்த பணியாரத்தில் பரவி கிடக்கும் தேங்காய் சில்லுகளும், கடலை பருப்பையும் தேடி ருசிக்கும் போது அதன் சுவை அலாதிதான் ...
/ சுவாசத்தின் போது, தூய காற்றை நிதானமாக, உள்ளிழுக்கும் போது உறுப்புகளின் அசைவை உணரும் தருணங்கள் சுகமானவை...
இப்படி செயல்கள் எதுவாயினும் அதன் வழி மனதை செலுத்தினால் அந்த நொடிகளில் வாழ்க்கை ரசனையாகதான் இருக்கிறது..
காலத்தின் வயது் அதிகரித்து, இதோ புது ஆண்டு பிறக்க போகிறது...
பல ஆண்டுகளாய் நினைத்து பட்டியல் போட்டவைகளை 2016-ல் ஆவது பின்பற்ற வேண்டும்...
அதில் முதலாவதாக, அன்றாட அவசிய செயல்களை பட்டியலிட்டு, தேவையற்றவற்றில் கவனம் செலுத்தாமல் இருந்தாலே வாழ்கை சுவையாகும்...
சரவணபவன்ல காபி குடிப்பதை கட் பண்ணனும்...
வாரத்தில் ஒரு நாளாவது மெரீனாவில் காற்று வாங்கணும்...
கோப வார்த்தைகளை குழி தோண்டி புதைக்கணும்...
என இன்னும் பல பட்டியல் 2016க்காக காத்திருகிறது...