கவிதைகள்

 வெற்றியை வேட்டையாடுவோம் 
01-01-2011, சனிக்கிழமை


இதோ!

புதிய வாய்ப்புகளின்
வாசல் திறந்திருக்கிறது!

இன்னும் ஒரு
புதிய ஆண்டு மலர்ந்திருக்கிறது!

3,15,36,000 விநாடிகள்
உயிர்ப்புடன் கிடைத்திருக்கிறது!

வெட்டிய கரும்பும்
விளைந்த நெல்லும்
பொங்கலாக இனிக்கப் போகிறது!

நமது நம்பிக்கைகளையும்
பயணங்களையும்
மறுபடி தொடங்குவோம்
வாருங்கள்!

திட்டமிடலும், முயற்சியும்
கைகூடினால்
எல்லாரின் கைகளுக்கும்
வெற்றிக்கனிகள் எட்டும்

எதிர்காலத்தை
இப்போதே வென்றிட
விடா முயற்சியுடன்
வெற்றியை வேட்டையாடுவோம்

3 comments:

  1. உங்கள் கவிதை நன்றாக உள்ளது. கைத்தேர்ந்த கவிஞர் போல எழுதி உள்ளீர்கள். தொடர்ந்து எழுதவும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. உங்கள் கவிதையால் நம்பிக்கை பிறக்கிறது. ஜெயா

    ReplyDelete
  3. ungal kavithai thannambikai uruvakukirathu.
    valthukkal
    kovairemesh

    ReplyDelete

Comment as என்ற இடத்தில் Anonymous என்பதைத் தெரிவு செய்து கொள்ளலாம் அல்லது gmail அக்கவுண்ட் இருந்தால் google என்ற விவரத்தைத் தெரிவு செய்து கொண்டு, உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.